தற்போதைய செய்திகள்:

Sep 25, 2011

பெற்ற குழந்தையை கொடுரமாக சாப்பிடும் மனிதன்!(படம் இணைப்பு)

தப்புவில் நகரத்தின் மேற்கு மாகாணத்தில் சுரங்க பகுதிகளில் வசிக்கும் குடியேற்ற வாசிகள் மாந்திரீக விழாக்களை கொண்டாடுவது வழக்கம். இவ்வாறு மாந்திரீக விழா கொண்டாடும்போது அண்மையில் அங்கு வசிக்கும் ஒருவர் தனது பச்சிளம் குழந்தையை மிகவும் கொடுரமான முறையில் கடித்து சாப்பிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்வம் பற்றி மேலும் தெரியவருவதாவது:-

Sep 21, 2011

வேலையில் கறாராக இருந்த மேனேஜர் மதுபாட்டிலால் குத்தி கொலை!

சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்த வீரராகவன் மகன் பாபு (50). தனியார் மார்க்கெட்டிங் கம்பெனி மேனேஜர். திருச்சி கே.கே.நகர் கிருஷ்ணமூர்த்தி நகரில் உள்ள கிளை அலுவலகத்தில் வேலை பார்த்தார். இங்கு தூத்துக்குடியை சேர்ந்த அப்துல்கலாம் ஆசாத் (41) என்பவர் பணியாற்றி வந்தார். பாபு, அப்துல் கலாம் ஆசாத் மற்றும் 3 பேர் அருகில் உள்ள இந்தியன் வங்கி காலனியில் ஒரு வீட்டினை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தனர். நேற்றிரவு பாபுவும், அப்துல் கலாம் ஆசாத்தும் அந்த வீட்டில் மது அருந்தினர்.

அப்போது, வேலை விஷயத்தில் கறாராக இருக்காமல் கொஞ்சம் விட்டுக் கொடுத்து நடக்கும்படி பாபுவிடம், அப்துல் கலாம் ஆசாத் கூறியுள்ளார். அதற்கு பாபு மறுத்து பேசியதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஆசாத் அருகில் கிடந்த காலி ‘ரம்‘ பாட்டிலை எடுத்து பாபுவின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் உடைந்த அந்த பாட்டிலின் மூலம் பாபுவின் கழுத்து, முகம், கை, கால் என பல இடங்களில் குத்தி விட்டு தப்பியோடி விட்டார்.

இதில் படுகாயமடைந்த பாபு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இரவு 10 மணிக்கு பணி முடிந்து, மற்ற ஊழியர்கள் வீட்டுக்கு வந்து பார்த்தபோது பாபு படுகாயத்துடன் உயிருக்கு போராடுவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாபு இறந்தார். போலீசார் வழக்குப்பதிந்து ஆசாத்தை கைது செய்தனர்.

Source: Tamilmurasu