தற்போதைய செய்திகள்:

May 12, 2011

துபாயில் 147வது மாடியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை..


துபாய், மே.12 - துபாயில் உள்ள மிக உயரமான கட்டிடத்தின் 147 வது மாடியிலிருந்து குதித்து வாலிபர் ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்டார். துபாயில் புர்ஜ் ஹாலிபர் என்ற கட்டிடம் உலகிலேயே மிக உயரமானது என்ற பெருமை பெற்றுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரிமாதம் திறக்கப்பட்ட 160 மாடி கொண்ட இந்த கட்டிடத்தில் பல வர்த்தக நிறுவனங்கள் உள்ளன.சிகாகோவை சேர்ந்த ஸ்கிட்மோர் என்ற கட்டிட கலை நிபுணர் இதனை வடிவமைத்துள்ளார்.  இந்நிலையில் நேற்று இங்குள்ள 147 வது மாடியிலிருந்து 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் குதித்து தற்கொலை செய்துகொண்டார். 2717 அடி உயரத்தில் உள்ள 147 வது மாடியில் இருந்து குதித்த அவரது உடல் 108 வது மாடியில் விழுந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.விசாரணையில் தற்கொலை செய்து கொண்ட வாலிபர் ஆசிய கண்டத்தை சேர்ந்தவர் என்றும், விடுமுறை அளிக்காததால் தான் வேலை பார்த்த நிறுவனம் உள்ள 147 வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்ததும் தெரியவந்தது. ஆனால் அவர் பெயர் வெளியிடப்படவில்லை. மேலும் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

0 comments:

Post a Comment

அடுத்தவரை துன்படுத்தும் வார்த்தையை கூடியவரை தவிர்க்கப்பாருங்கள், நமக்கு ஏற்படும் நோய்க்கு அதுவும் ஒரு காரணம். !!