தற்போதைய செய்திகள்:

May 10, 2011

ஜனாஸா தொழுகையும், ராமகோபாலனின் ஒப்பாரியும்



rama kobalan
சென்னை மெளண்ட் ரோடு மக்கா மஸ்ஜிதில் கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்காவால் படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படும் உஸாமா பின் லாடினுக்காக காயிப் ஜனாஸா (மறைவான மரணத்தொழுகை) நடத்தப்பட்டது. இந்நிகழ்வை பரப்பரப்பிற்காக காத்திருக்கும் சில பத்திரிகைகள் செய்தியாக வெளியிட்டன.
இச்செய்தி வெளியானதும், ஏற்கனவே சொந்தப்புத்தியை இழந்து மந்தப்புத்தியில் வாழ்க்கையை ஓட்டும் ஹிந்து முன்னணி என்ற பாசிச அமைப்பின் தலைவர் ராமகோபால அய்யருக்கு தேசபக்தி(?) எக்குதப்பாக எகிறவே காரசாரமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அய்யரின் அரைவேக்காட்டு அறிக்கையை அக்குவேறு ஆணிவேறாக அலசுவது நமது நோக்கமல்ல. ஆனால், இச்சம்பவத்தை குறித்து வரும் நாட்களில் சில புலனாய்வு(?) பத்திரிகைகள் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக செய்திகளை வெளியிடலாம். முஸ்லிம்களின் தேசப்பக்தியை சோதிக்க இச்சம்பவத்தை பாசிஸ்டுகள் ஒரு அளவுகோலாக மாற்றலாம். ஆகவே இதனை குறித்த உண்மை நிலையை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
உஸாமா அல்லது அவரது அல்காயிதா இயக்கத்தினால் இந்தியாவுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை, அல்காயிதாவின் செயல்பாடும் இந்தியாவில் இல்லை என ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உறுதிபட தெரிவித்துவிட்டார். உஸாமா அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் எதிர்ப்புஸ் சின்னமாகவே உலக முழுவதும் கருதப்படுகிறார். ஆகவே உஸாமாவை ஆதரித்து பேசுவதாலோ அல்லது அவருக்காக பிரார்த்தனை புரிவதாலோ இந்தியாவின் இறையாண்மைக்கு எவ்வித இழுக்கும் ஏற்படாது.
ஏகாதிபத்திய சக்திகளுக்கெதிரான போராட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள சேகுவாராவையும், பிடல் காஸ்ட்ரோவையும் ஆதரித்து பேசுவதை எவரும் தேசவிரோத செயலாக கருதுவதில்லை. சேகுவாராவின் படத்தை பொறித்த டீ சர்ட்டுகளை அணிவதையும் எவரும் குற்ற செயலாக கருதுவதில்லை. இந்நிலையில் உஸாமாவை ஆதரித்து பேசுவதும், எழுதுவதும் எவ்வகையில் தவறாகும்? உஸாமாவை குறித்து வெளியாகும் செய்திகளில் பெரும்பாலானவை புனையப்பட்டவையாகும். செய்திகளின் உறைவிடமாக அமெரிக்கா திகழும் பொழுது அதன் உண்மை நிலைக்குறித்து சந்தேகமே மிஞ்சுகிறது!
உஸாமா பின் லாடின் உலகிற்கு அச்சுறுத்தலாக விளங்கினார் என்ற எண்ணமே தவறாகும். அவர் தக்க காரணங்களால் அமெரிக்காவிற்கும் அந்நாட்டின் ஆக்கிரமிப்பு கொள்கைகளுக்கும் மட்டுமே அச்சுறுத்தலாக விளங்கினார். இந்தியா தனது பாரம்பரிய அணிசேராக் கொள்கையை கைகழுகி விட்டு அமெரிக்காவின் ஆதிக்கக் கொள்கைகளுடன் சமரசம் செய்த போதும் உஸாமா இந்தியாவிடம் பகைமை பாராட்டவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆனால், ஒட்டுமொத்த மனித சமூகத்திற்கும் எதிரானக் கொள்கைகளை தத்தெடுத்து உருவாக்கப்பட்ட, ராமகோபால அய்யர் உள்ளிட்ட கயவர்களை உற்பத்தி செய்த ஹிந்துத்துவ பயங்கரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ்ஸும் அதன் துணை அமைப்புகளும் இந்த தேசத்தின் ஒருமைப்பாட்டிற்கும், இறையாண்மைக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளன என்பதை எவராலும் மறுக்கமுடியாது.
ஆகவே உஸாமாவைக் குறித்து பேசுவது இந்தியாவிற்கு எவ்வித பங்கத்தையும் விளைவிக்காது. அதே வேளையில் ஆர்.எஸ்.எஸ்ஸைப் பற்றி பேசுவதும், அதன் கொள்கைகளை பரப்புவதும் தான் இந்தியாவிற்கு மிகப்பெரும் இழுக்கை தேடித்தரும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்!

3 comments:

Madhu said... [Reply]

//உஸாமாவைக் குறித்து பேசுவது இந்தியாவிற்கு எவ்வித பங்கத்தையும் விளைவிக்காது. அதே வேளையில் ஆர்.எஸ்.எஸ்ஸைப் பற்றி பேசுவதும், அதன் கொள்கைகளை பரப்புவதும் தான் இந்தியாவிற்கு மிகப்பெரும் இழுக்கை தேடித்தரும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்!//
அப்படியா..ஐயோ.....!!!! புல்லரிக்க வைக்கிறது.
ஒசாமா முஸ்லிம் என்கிற ஒரே காரணத்திற்காக நீங்கள் வக்காலத்து வாங்குவதால், இனிமேல் rss பற்றி பேசுவதும் அதன் கொள்கைகளை பரப்புவதும் முஸ்லிம் அல்லாதவர்கள் ஆதரிக்க வேண்டும். rss ஆல் ஆபத்து முஸ்லிம்களுக்கு. ஒசாமாவால் ஆபத்து முஸ்லிம் அல்லாதவர்களுக்கு.

முத்துவாப்பா.. said... [Reply]

சகோதரர் மது அவர்களே உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக..
தங்களின் கருத்துக்கு மிகவும் நன்றி... ஒசாமா ஒரு முஸ்லிம் என்பதற்காக நான் வக்காலத்து வாங்கவில்லை..இரட்டை கோபுர தாக்குதல் வழக்கில் அவர்தான் அதை செய்தார் என்று நிரூபித்தால் முதலில் அவர் உடலில் பாய்கின்ற குண்டு ஒரு முஸ்லிமுடையதாக தான் இருக்கும். இஸ்லாம் ஒரு போதும் தீவிரவாதத்தை ஆதாரிக்காது.

பொன் மாலை பொழுது said... [Reply]

நண்பர் seyed அவர்களுக்கு.

நீங்கள் தந்த இணைப்பினை கொண்டு உங்கள் தளம் வந்தேன். சென்னையில் பின்லாடன் மறைவிற்கான தொழுகை செய்தியை தொலைகாட்சியில் கண்டவுடன் என் பதிவினை தமிழ் பிளாகரில்,இட்டேன். அதற்கு சில மணிகள் கழித்து இதே நிகழ்வு குறித்து. ராம கோபாலன் போன்றவர்களின் அறிக்கையும் வலையில் வெளியிடப்பட்டது மற்றபடி என் இடுகைக்கு நானே பொறுப்பு. வேறு எவருமில்ல.

அந்த தொழுகை செய்தியை அறிந்தபோது என்மனதில் ஓடியதெல்லாம் இதுதான்.

முன்னரே தொடர்ந்து பல வருடங்களாக இந்தியாவிலும், உலக அளவிலும் முஸ்லிம்கள் மீது பயங்கரவாதிகளின் பக்கம் நிற்பவர்கள் என்ற எண்ணம் உண்டாகபட்டுஎங்கும் நிறைதுள்ள நிலையில் இதுபோன்ற ஒரு நிகழ்வை ஏன் அதுவும் தமிழ்நாட்டில் நடத்தி காட்டுகின்றனர் என்ற ஐயம் தான் என்னை அப்பதிவினை எழுத தூண்டியது அன்றி என்னிடம் வேறு எந்த நோக்கமும் நோக்கம் இல்லை. அந்த பதிவின் பின்னூடங்களை தாங்கள் மறுமுறையும் ஒருதடவை படித்துவிட்டு கருத்தை சொல்லுங்கள்.
தங்கின் வருகைக்கு நன்றி.

Post a Comment

அடுத்தவரை துன்படுத்தும் வார்த்தையை கூடியவரை தவிர்க்கப்பாருங்கள், நமக்கு ஏற்படும் நோய்க்கு அதுவும் ஒரு காரணம். !!