தற்போதைய செய்திகள்:

May 19, 2011

எனக்காக போக்குவரத்தை நிறுத்தக்கூடாது - முதல்வர் ஜெ. அதிரடி உத்தரவு!



முதல்வராகப் பொறுப்பேற்ற அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சென்னை அண்ணா சாலையிலுள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து நன்றி செலுத்த வந்தபோது பகல் 12:00 மணிமுதல் மாலை 5:00 மணிவரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று அமைச்சர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் ஜெயலலிதா, தனது பயணத்தின்போது பொதுமக்களுக்கு இடையூறாக போக்குவரத்தை நிறுத்தக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, கோட்டையில் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஜெயலலிதா வந்தபோதும், திரும்பி சென்றபோதும் போக்குவரத்து அதிகபட்சமாக 5 நிமிடங்கள் மட்டுமே நிறுத்தப்பட்டது.

0 comments:

Post a Comment

அடுத்தவரை துன்படுத்தும் வார்த்தையை கூடியவரை தவிர்க்கப்பாருங்கள், நமக்கு ஏற்படும் நோய்க்கு அதுவும் ஒரு காரணம். !!