தற்போதைய செய்திகள்:

Jun 1, 2011

2ஜி விவகாரம் - சன் டி.வி. 700 கோடி ரூபாய் ஊழல்!!

 அது குற்றமென்றால் இது என்ன? எனக் கேள்வி எழுப்புகிறது ஆங்கில புலனாய்வு இதழான தெஹல்கா. 

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் திகார் சிறையில் உள்ள ஆ.ராசா மீது சி.பி.ஐ. சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளில் முக்கியமானவை, 

2001ஆம் ஆண்டுக்கான விலையிலேயே அலைக்கற்றை ஒதுக்கப்பட்டது என்பதும், 

முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஒதுக்கீடு வழங்கப்பட்டது என்பதும்தான். 


இந்த நடைமுறை,  ஆ.ராசா வுக்கு முன் தகவல் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் காலத்திலும் நடைமுறையில் இருந்தது.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக 2001ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டுவரை என்ன நடந்தது என்று விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட 

நீதிபதி சிவராஜ் பாட்டீல் தலைமையிலான குழு அறிக்கை அளித்துள்ளது. 
இதில் ஒதுக்கீட்டு விதிமுறைகளை பல முறை தயாநிதி மாறன் மீறியிருக்கிறார்’’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இது போன்ற ஒரு விதிமீறல்களால் தயாநிதியின் சகோதரர் கலாநிதி மாறனின் சன் டி.வி. நிர்வாகம் 700 கோடி ரூபாய் பலனடைந்திருப்பது பற்றிய செய்தியை தெஹல்கா வெளியிட்டுள்ளது.

அதுபோல் 2004 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா ஆட்சி நடந்த போது, தகவல் தொடர்புத்துறை அமைச்சராக அருண்ஷோரி இருந்தார். இவர் டிஷ்நெட் ஒயர்லெஸ் லிமிட்டெட் (ஏர்செல்) உட்பட பல நிறுவனங்களுக்கு முறைகேடாக காற்றலை ஒதுக்கீடு செய்தார் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.


நன்றி - சிந்திக்கவும்.நெட்

0 comments:

Post a Comment

அடுத்தவரை துன்படுத்தும் வார்த்தையை கூடியவரை தவிர்க்கப்பாருங்கள், நமக்கு ஏற்படும் நோய்க்கு அதுவும் ஒரு காரணம். !!