தற்போதைய செய்திகள்:

Jun 5, 2011

ராம்தேவ் ஒரு பிராடு-திக்விஜய் சிங்

காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் கூறுகையில், ராம்தேவ் மீதான நடவடிக்கை முழுக்க முழுக்க அரசு சார்ந்தது. அதில் காங்கிரசுக்கோ அரசியலுக்கோ தொடர்பில்லை. ஆனால், அரசியல் செய்தது எல்லாமே ராம்தேவ் தான்.

தனக்கு குருவாக இருந்தவரையே விரட்டிவிட்டவர் இந்த ராம்தேவ். அவருக்கு அடுத்த நிலையில் இருந்த ஒரு நபரை ஆசிரமத்திலும் காணவில்லை, வெளியிலும் காணவில்லை. அவர் என்ன ஆனார் என்றே இதுவரை தெரியவில்லை.

ஆதாரமே இல்லாமல் கேன்சரை யோகா மூலம் தீர்ப்பேன், அதைச் செய்வேன், இதைச் செய்வேன் என்று ஏமாற்றிய பிராடு தான் ராம்தேவ்.

நிதியமைச்சர் பிரணாப் போன்றவர்கள் தங்களது அரசியல் எதிர்காலத்தையே அடகு வைக்கும் அளவுக்கு, மிகவும் இறங்கி வந்து ராம்தேவுடன் விமான நிலையத்திலேயே போய் பேசினார். ஆனால், பேசியது ஒன்று செய்வது ஒன்று தனது மோசடி செயல்களை தொடர்ந்தார் ராம்தேவ்.

இந்த நபரின் வருமானம், நன்கொடைகள் குறித்து முழு அளவில் விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

0 comments:

Post a Comment

அடுத்தவரை துன்படுத்தும் வார்த்தையை கூடியவரை தவிர்க்கப்பாருங்கள், நமக்கு ஏற்படும் நோய்க்கு அதுவும் ஒரு காரணம். !!