தற்போதைய செய்திகள்:

Jun 1, 2011

பிளஸ் 2 தேர்வில் தேறிய மந்திரி - ஆத்தா... நான் பாஸ் ஆகிட்டேன்..!!!

  ஒரிசா மாநில முதல் அமைச்சர் நவீன்பட்நாயக்கின் தலைமையில் அமைந்துள்ள மந்திரி சபையில் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் தகவல் தொழில் நுட்ப துறை கேபினட் மந்திரியாக பதவி வகிப்பவர் ரமேஷ் சந்திரமாஜி. இவர் பிளஸ் 2 படிக்காதது அவருக்கு பெரும் மனக்குறையாக இருந்து வந்தது. எனவே அமைச்சர் பணிக்கு இடையிலும் பிளஸ் 2 தேர்வுக்கு படித்து வந்தார் அவர். நவ்ரக்பூர் மாவட்டம் பன்பேடா மகாவித்யாலயாவில் சமீபத்தில் மந்திரி மாலி பிளஸ் 2 தேர்வு எழுதினார். அந்த பள்ளியின் நிர்வாக குழு உறுப்பினரான அவருக்கு தனி அறையில் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த பிளஸ் 2 தேர்வுக்கான முடிவுகள் வெளியானது. இதில் மந்திரி மாஜி 600 க்கு 376 மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றார். 

தேர்வில் வெற்றி பெற்றதும் மாணவர்கள் துள்ளி குதிப்பது போல பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்ற விவரம் தெரிந்ததும் மந்திரி மாஜியும் பெரும் மகிழ்ச்சியடைந்தார்.

 இது குறித்து அவர் கூறும் போது, 
பிளஸ் 2 தேர்வில் நான் வெற்றி பெற்றிருக்கிறேன். அமைச்சர் பணியின் நெருக்கடிக்கு இடையில் தேர்வு எழுதி வெற்றி பெற்றிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. தொடர்ந்து படிக்க நான் திட்டமிட்டு இருக்கிறேன். அமைச்சராக பணிகள் இருந்தாலும் படிப்பு மிகவும் முக்கியம். இவ்வாறு அவர் கூறினார்.

Source - Thinaboomi

0 comments:

Post a Comment

அடுத்தவரை துன்படுத்தும் வார்த்தையை கூடியவரை தவிர்க்கப்பாருங்கள், நமக்கு ஏற்படும் நோய்க்கு அதுவும் ஒரு காரணம். !!