தற்போதைய செய்திகள்:

Jun 18, 2011

ரஜினிக்கு என்ன ஆச்சு....? –



நாளுக்கு நாள் நடிகர் ரஜினிகாந்த் செய்து வரும் காமெடியை பார்க்கும் போது தான் எனக்கு இப்படி தலைப்பிட தோன்றிற்று.

கடந்த கால தேர்தலில் அவர் பேசிய வார்த்தைகளையும் இப்போது அவர் கூறும் கருத்துகளையும் பார்க்கும் பொது அவர் சென்றிருக்க வேண்டியது சிங்கப்பூர் அல்ல சென்னை கீழ்ப்பாக்கம் என்று நீங்களே சொல்லுவீர்கள்.

கடந்த கால தேர்தலில் “ மறுபடியும் இந்த ஜெயலலிதா ஜெயிச்சா இனி இந்த தமிழ் நாட்டை ஆண்டவனால கூட காப்பாத்த முடியாது “ என்று அரைகூவல் விட்டவர் தான் இந்த ரஜினிகாந்த் .தற்பொழுது உடல் நிலை சரியானதும் சிங்கப்பூரில் இருந்து தொலைபேசி மூலம் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் பேசும் போது “ சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றிருப்பதன் மூலம் தமிழகம் காப்பாற்ற பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்”.


மேலும் அவர் காமெடி இதோடு முடியவில்லை ஏற்கனவே சட்டமன்ற தேர்தலில் ஓட்டு போட்டு முடித்துவிட்டு பின்னர் தொலைகாட்சிக்கு கொடுத்த பேட்டியில் அப்படி இப்படின்னு பேட்டி கொடுத்துட்டு கடைசில அவர் யாருக்கு ஓட்டு போட்டார்னு வெளிச்சத்திற்கு வந்த பின்னாடியும் வெட்கமே இல்லாமல் அடுத்த நாள் கருணாநிதியுடன் உட்க்காந்து பொன்னர்சங்கர் படம் பார்த்து பாதில அவமானப்பட்டு வெளிய வந்தவர் தான் இந்த சூப்புன ஸ்டார் ரஜினிகாந்த். ஏற்கனவே ரஜினிகாந்த் மேல கடுங்காட்டத்துல இருக்கிறது திமுக இந்த லட்சணத்துல அம்மாவால தமிழ்நாடு காப்பற்றப் பட்டுல்லதுன்னு அம்மாகிட்ட பேசிட்டு . கலைஞருக்கு போன் பண்ணி “ நீங்கள் வாழ்வில் பல ஏற்றத்தாழ்வுகள், மேடு பள்ளங்களையெல்லாம் சந்தித்தவர் .உங்கள் உடல் நலம் பேணுவதுதான் முக்கியம்.எது பற்றியும் பெரிதாகக் கருதாமல் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இப்படி தன்னுடைய சுயநலத்திற்காக மாறி மாறி பேசிவருபவரை நாம் வேறென்ன தலைப்பிட்டு சொல்ல முடியும்.

உடல் மண்ணுக்கு உயிர் ரஜினிக்கு என்று ரஜினி ரசிகர்கள் கூறி திரிவதும், அவர் படம் வெளியாகும் போது கட்டவுட்டுக்கு பால் அபிசேகம் செய்வதுமாக, தங்கள் குடும்பங்களை கவனிக்காமல் சீரழிந்த குடும்பங்கள் எத்தனை. இதுபோல் கூத்துக்கள் உலகில் எந்த நாட்டிலும் நடக்காது, இந்த போன்ற கொடுமைகளை குறிப்பாக தமிழகத்திலேயே பார்க்க முடிகிறது. இனியாவது திருந்துவார்களா...??? இது போன்ற மக்கள் ....?????

3 comments:

Anonymous said... [Reply]

rajinikku enna aachungaradhe vidunga, mothalle kulkusma ku enna aachu paarunga editor sir.
vara vara hit koranjikitte pogudhey... ippudiye ponaa
appuram indha blogum ooo...oooooo....

முத்துவாப்பா.. said... [Reply]

தம்பி ஹிட்டை தேடி நாம போக கூடாது நம்மள தேடி ஹிட்டு வரணும் ....

Anonymous said... [Reply]

nalla nalla news poduradhukku peruthaan hitte thedi poradhungaradhu. news se podame pageview varum varumnu
ukkantha onnum varradhu..
paaru innaiku verum 15 hit thaan....
ungale thedi hit varadhu kottu thaan varum

Post a Comment

அடுத்தவரை துன்படுத்தும் வார்த்தையை கூடியவரை தவிர்க்கப்பாருங்கள், நமக்கு ஏற்படும் நோய்க்கு அதுவும் ஒரு காரணம். !!