அருகில் இருந்த சக மாணவர்கள் பிரபாகரனை விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதில் அதிர்ச்சியடைந்த கல்லூரி மாணவர்கள் அனைவரும் கல்லூரி முன்பு அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் ஏடிஎஸ்பி பெருமாள், டிஎஸ்பி சேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவர்களிடம் பேச்சு நடத்தினர். மேலும் ஆர்டிஓ பிரியாவும் வந்து மாணவர்களிடம் பேச்சு நடத்தி உங்கள் கோரிக்கைகளை எழுதிக்கொடுங்கள் அது ஏற்றுக்கொள்ளப்படும் எனக் கூறினார். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. திருச்சி சாலையில் மாணவர்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Source:Tamilmurasu
0 comments:
Post a Comment
அடுத்தவரை துன்படுத்தும் வார்த்தையை கூடியவரை தவிர்க்கப்பாருங்கள், நமக்கு ஏற்படும் நோய்க்கு அதுவும் ஒரு காரணம். !!