அப்போது ஒரு வாலிபர் அரக்கப் பரக்க ஓடி வந்து ஏர்-ஏசியா விமானத்தில் ஏற முயன்றார். அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு படையினர் உடனடியாக அந்த வாலிபரை விமான நிலைய ஓடுதள பாதையிலிருந்து தூக்கி அப்புறப்படுத்தினர்.
பிடிபட்ட அந்த வாலிபரை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கைது செய்து விசாரணை நடத்தியபோது அவர் புதுக்கோட்டை மாவட்டம் கரையாம்பட்டியைச் சேர்ந்த அருணாச்சலம் என்று தெரிய வந்தது.
சிறுவயது முதலே விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்ததாகவும், ஆனால் விமானத்தில் பயணம் செய்யும் அளவு வசதியில்லாததால் விமான நிலைய சுற்று சுவர் ஏறி குதித்து விமானத்தில் ஏற முயன்றதாகவும் விசாரணையில் அவர் தெரிவித்துள்ளார். அவரிடம் கியூ பிரிவு மற்றும் தீவிரவாதிகள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பிடிபட்ட அந்த வாலிபரை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கைது செய்து விசாரணை நடத்தியபோது அவர் புதுக்கோட்டை மாவட்டம் கரையாம்பட்டியைச் சேர்ந்த அருணாச்சலம் என்று தெரிய வந்தது.
சிறுவயது முதலே விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்ததாகவும், ஆனால் விமானத்தில் பயணம் செய்யும் அளவு வசதியில்லாததால் விமான நிலைய சுற்று சுவர் ஏறி குதித்து விமானத்தில் ஏற முயன்றதாகவும் விசாரணையில் அவர் தெரிவித்துள்ளார். அவரிடம் கியூ பிரிவு மற்றும் தீவிரவாதிகள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Source: inneram.com
0 comments:
Post a Comment
அடுத்தவரை துன்படுத்தும் வார்த்தையை கூடியவரை தவிர்க்கப்பாருங்கள், நமக்கு ஏற்படும் நோய்க்கு அதுவும் ஒரு காரணம். !!